Vol 7. (November 2020)
Mumbai SVD NGO receives Corona Warrior Award
Mumbai SVD NGO receives Corona Warrior Award
மும்பை SVD NGOவுக்கு கொரோனா வீரர் விருது
மும்பை SVD NGOவுக்கு கொரோனா வீரர் விருது
கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் தன்னலமற்ற சேவை செய்த பல குழுக்களில் நகர்ப்புற சமூக விருத்தி நிலையத்திற்கு (The Urban Community Development Centre (UCDC), Bandra, Mumbai) மகாராஷ்டிரா மாநில கவர்னர் பகத் சிங் கோஷியாரியின் கையால் நன்மதிப்பு விருது கிடைத்தது. கவர்னர் மாளிகையில் நவம்பர் முதல் தேதி அன்று அதன் விழா நடந்தது.
கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் தன்னலமற்ற சேவை செய்த பல குழுக்களில் நகர்ப்புற சமூக விருத்தி நிலையத்திற்கு (The Urban Community Development Centre (UCDC), Bandra, Mumbai) மகாராஷ்டிரா மாநில கவர்னர் பகத் சிங் கோஷியாரியின் கையால் நன்மதிப்பு விருது கிடைத்தது. கவர்னர் மாளிகையில் நவம்பர் முதல் தேதி அன்று அதன் விழா நடந்தது.
UCDC என்பது இந்தியாவில் உள்ள மும்பை பகுதியின் இறை வார்த்தை (SVD ) அயல் நாட்டுச் சமய போதகர்களின் NGO ஆகும். இறை வார்த்தை சபை அருள் பணி கொஸ்மோஸ் எக்கா, ஒரு பணியாளர் சொல்லுகிறார், "ucdc யின் தரப்பில், இந்த உயர்ந்த விருதை புனித ஆர்னால்டு இளைஞர் குழுவிற்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் அர்ப்பணம் செய்கின்றேன்."
UCDC என்பது இந்தியாவில் உள்ள மும்பை பகுதியின் இறை வார்த்தை (SVD ) அயல் நாட்டுச் சமய போதகர்களின் NGO ஆகும். இறை வார்த்தை சபை அருள் பணி கொஸ்மோஸ் எக்கா, ஒரு பணியாளர் சொல்லுகிறார், "ucdc யின் தரப்பில், இந்த உயர்ந்த விருதை புனித ஆர்னால்டு இளைஞர் குழுவிற்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் அர்ப்பணம் செய்கின்றேன்."
நிதி அளித்த நிறுவனங்களான புனித அகஸ்தீன் Life Anchor foundation க்கும் UCDC குடும்பத்திற்கும் இந்த மனிதாபிமான செயலுக்கு நிதி அளித்து ஆதரவு அளித்ததற்காக அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
நிதி அளித்த நிறுவனங்களான புனித அகஸ்தீன் Life Anchor foundation க்கும் UCDC குடும்பத்திற்கும் இந்த மனிதாபிமான செயலுக்கு நிதி அளித்து ஆதரவு அளித்ததற்காக அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அருள் பணி எக்கா சொன்னார், "எங்கள் முயற்சிகளை பாராட்டி அவற்றை அங்கீகரித்தற்காக வழக்கறிஞர் ஆசிஷ் ஷெலார், MLA வுக்கும் மும்பை மாநகராட்சியின் ஸ்வப்னா மாத்ரேக்கும் எங்கள் ஆழ்ந்த நன்றிகள் உரித்தாகுக".
அருள் பணி எக்கா சொன்னார், "எங்கள் முயற்சிகளை பாராட்டி அவற்றை அங்கீகரித்தற்காக வழக்கறிஞர் ஆசிஷ் ஷெலார், MLA வுக்கும் மும்பை மாநகராட்சியின் ஸ்வப்னா மாத்ரேக்கும் எங்கள் ஆழ்ந்த நன்றிகள் உரித்தாகுக".
பிரபலமான இந்தி பட இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமான சுபாஷ் கய், பட மற்றும் நாடக பிரபலமானவருமான பிரசாந்த் டாம்லே, மாநகராட்சி உறுப்பினரான அல்கத்தாய் கேர்கர் இவர்களும் கொரோனா வீரர்கள் விருது கொடுத்து கவர்னரால் கௌரவிக்கப் பட்டனர்.
பிரபலமான இந்தி பட இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமான சுபாஷ் கய், பட மற்றும் நாடக பிரபலமானவருமான பிரசாந்த் டாம்லே, மாநகராட்சி உறுப்பினரான அல்கத்தாய் கேர்கர் இவர்களும் கொரோனா வீரர்கள் விருது கொடுத்து கவர்னரால் கௌரவிக்கப் பட்டனர்.
1971 ல் உருவாகி UCDC சமூக விருத்திக்காக தனது சேவைகளை செய்து கொண்டிருக்கிறது. ஏழைகளுக்கும், தேவையில் இருப்பவர்களுக்கும் மருந்து கொடுப்பதிலும் அறிவுக் கல்வி வழங்குவதிலும் இவர்கள் தொடர்ந்து சேவை செய்து கொண்டு வருகின்றனர். ஏழைகளுக்கும் தாழ் நிலையில் இருக்கும் மக்களுக்கும் சேவை செய்வதெற்கென்றே ஒரு சட்ட மையத்தை நடத்தி வருகின்றனர்.இந்த மையத்தில் மூன்று வழக்கறிஞர்கள் இலவச சேவை செய்கிறார்கள் . சமூகத்தில் தாழ் நிலையில் இருக்கும் மக்களுக்கும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் மக்களுக்கும் சேவை செய்ய உண்மையாகவே உழைக்க முன் வந்திருக்கும் மக்களால் ucdc அமைப்பு முழுவதும் நிரம்பி உள்ளது.
1971 ல் உருவாகி UCDC சமூக விருத்திக்காக தனது சேவைகளை செய்து கொண்டிருக்கிறது. ஏழைகளுக்கும், தேவையில் இருப்பவர்களுக்கும் மருந்து கொடுப்பதிலும் அறிவுக் கல்வி வழங்குவதிலும் இவர்கள் தொடர்ந்து சேவை செய்து கொண்டு வருகின்றனர். ஏழைகளுக்கும் தாழ் நிலையில் இருக்கும் மக்களுக்கும் சேவை செய்வதெற்கென்றே ஒரு சட்ட மையத்தை நடத்தி வருகின்றனர்.இந்த மையத்தில் மூன்று வழக்கறிஞர்கள் இலவச சேவை செய்கிறார்கள் . சமூகத்தில் தாழ் நிலையில் இருக்கும் மக்களுக்கும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் மக்களுக்கும் சேவை செய்ய உண்மையாகவே உழைக்க முன் வந்திருக்கும் மக்களால் ucdc அமைப்பு முழுவதும் நிரம்பி உள்ளது.
Matters India
Matters India
Fr SM Michael, SVD appointed to Pontifical Council for Inter-Religious Dialogue
Fr SM Michael, SVD appointed to Pontifical Council for Inter-Religious Dialogue
மதங்களிடையே நல்லுறவு உரையாடலுக்கான பாப்பரசரின் ஆலோசனைக் குழுவில் அருள் பணி S M மைக்கில் அடிகளார் நியமிக்கப் பட்டிருக்கிறார்.
மதங்களிடையே நல்லுறவு உரையாடலுக்கான பாப்பரசரின் ஆலோசனைக் குழுவில் அருள் பணி S M மைக்கில் அடிகளார் நியமிக்கப் பட்டிருக்கிறார்.
இறை வார்த்தை சபையின் அருள் பணி செபாஸ்டியன் மரிய மைக்கிள் அடிகளார் பெயர் பெற்ற சமூகவியல் வல்லுநர், ஒரு எழுத்தாளர். இவர் மதங்களிடையே நல்லுறவு உரையாடலுக்கான பாப்பரசரின் ஆலோசனைக் குழுவில் ஆலோசகராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.
இறை வார்த்தை சபையின் அருள் பணி செபாஸ்டியன் மரிய மைக்கிள் அடிகளார் பெயர் பெற்ற சமூகவியல் வல்லுநர், ஒரு எழுத்தாளர். இவர் மதங்களிடையே நல்லுறவு உரையாடலுக்கான பாப்பரசரின் ஆலோசனைக் குழுவில் ஆலோசகராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.
பம்பாய் உயர் மறைமாவட்டத்தின் மதங்களிடையே நல்லுறவு உரையாடலுக்கான பணிமுறைக் குழுவின் இயக்குனராக அருள் பணி மைக்கிள் அடிகளார் பணி புரிகிறார். மும்பை பல்கலைக் கழகத்தின் சமூகவியல் இலாகாவில் விரிவுரையாளராக பணி புரிகிறார். மும்பையில் இருக்கும் இந்திய கலாச்சார நிறுவனத்தில் கௌரவ இயக்குனராக பணி புரிகிறார்.
பம்பாய் உயர் மறைமாவட்டத்தின் மதங்களிடையே நல்லுறவு உரையாடலுக்கான பணிமுறைக் குழுவின் இயக்குனராக அருள் பணி மைக்கிள் அடிகளார் பணி புரிகிறார். மும்பை பல்கலைக் கழகத்தின் சமூகவியல் இலாகாவில் விரிவுரையாளராக பணி புரிகிறார். மும்பையில் இருக்கும் இந்திய கலாச்சார நிறுவனத்தில் கௌரவ இயக்குனராக பணி புரிகிறார்.
இந்த குருவானவர் ஜெர்மனியில் உள்ள Bonn ல் இருக்கும் Anthropos நிறுவனத்திற்கும், Magdeburg பல்கலைக் கழகத்திற்கும் வருகை தரும் பேராசிரியராக பணி புரிகிறார்.
இந்த குருவானவர் ஜெர்மனியில் உள்ள Bonn ல் இருக்கும் Anthropos நிறுவனத்திற்கும், Magdeburg பல்கலைக் கழகத்திற்கும் வருகை தரும் பேராசிரியராக பணி புரிகிறார்.
பூனாவில் இருக்கும் தத்துவ இயல் மற்றும் மதம் சார்ந்த பாப்பரசரின் நிறுவனமான ஞான தீபா வித்யாபீத் போன்ற உயர் போதனை நிறுவனங்களிலும், பல குரு மடங்களிலும், கொல்கத்தா வில் இருக்கும் Morning star கல்லூரியிலும், பம்பாய் உயர் மறை மாவட்டத்தின் குருமடமான புனித பத்தாம் பத்திநாதர் கல்லூரியிலும் அருள் பணி மைக்கிள் அடிகளார் வருகை தரும் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
பூனாவில் இருக்கும் தத்துவ இயல் மற்றும் மதம் சார்ந்த பாப்பரசரின் நிறுவனமான ஞான தீபா வித்யாபீத் போன்ற உயர் போதனை நிறுவனங்களிலும், பல குரு மடங்களிலும், கொல்கத்தா வில் இருக்கும் Morning star கல்லூரியிலும், பம்பாய் உயர் மறை மாவட்டத்தின் குருமடமான புனித பத்தாம் பத்திநாதர் கல்லூரியிலும் அருள் பணி மைக்கிள் அடிகளார் வருகை தரும் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
இறை வார்த்தையின் அயல் நாட்டு போதக சபையின் தென் இந்திய பிரதேசத்தின் அங்கத்தினராக அருள் பணி மைக்கிள் அடிகளார் செயலாற்றுகிறார். இறை வார்த்தையின் அயல் நாட்டு சேவையில் Asia – pacific மண்டலத்திற்கு மண்டல ஒருங்கிணைப்பாளராக பணி புரிகிறார். கலாச்சாரங்களுக்கிடையே உள்ள இணைப்பைப் பற்றிய கருத்தரங்குகளை குருக்கள், கன்னியர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களுக்காகவும் இந்த குருவானவர் நடத்துகிறார்.
இறை வார்த்தையின் அயல் நாட்டு போதக சபையின் தென் இந்திய பிரதேசத்தின் அங்கத்தினராக அருள் பணி மைக்கிள் அடிகளார் செயலாற்றுகிறார். இறை வார்த்தையின் அயல் நாட்டு சேவையில் Asia – pacific மண்டலத்திற்கு மண்டல ஒருங்கிணைப்பாளராக பணி புரிகிறார். கலாச்சாரங்களுக்கிடையே உள்ள இணைப்பைப் பற்றிய கருத்தரங்குகளை குருக்கள், கன்னியர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களுக்காகவும் இந்த குருவானவர் நடத்துகிறார்.
அவர் வெளியிட்ட புத்தகங்களில் சில :
அவர் வெளியிட்ட புத்தகங்களில் சில :
“The Cultural Context of Evangelization in India” (1980), நற்செய்தி பரப்புவதில் இந்தியக் கலாச்சாரம்
“The Cultural Context of Evangelization in India” (1980), நற்செய்தி பரப்புவதில் இந்தியக் கலாச்சாரம்
“Anthropology as a Historical Science: Essays in Honour of Stephen Fuchs” (co-edited, 1984),
“Anthropology as a Historical Science: Essays in Honour of Stephen Fuchs” (co-edited, 1984),
“Culture & Urbanization” (1989), கலாச்சாரமும் நகர மயமாக்கலும்
“Culture & Urbanization” (1989), கலாச்சாரமும் நகர மயமாக்கலும்
“Anthropology of Conversion in India” (1998), இந்தியாவில் மதம் மாறுவதில் உள்ள பழக்க வழக்கங்கள்
“Anthropology of Conversion in India” (1998), இந்தியாவில் மதம் மாறுவதில் உள்ள பழக்க வழக்கங்கள்
“Culture and Nationalism: Clarifying the Cultural Reality of India” (co-edited with Leela D’Souza and Rowena Robinson, 2000), கலாச்சாரமும் தேசிய வாதமும்
“Culture and Nationalism: Clarifying the Cultural Reality of India” (co-edited with Leela D’Souza and Rowena Robinson, 2000), கலாச்சாரமும் தேசிய வாதமும்
“Globalization and Social Movements: Struggle for a Humane Society” (co-edited, 2003), உலகமயமாக்கலும் சமூக இயக்கங்களும் : மனித நேய சமுதாயம் அமைய போராட்டங்கள்
“Globalization and Social Movements: Struggle for a Humane Society” (co-edited, 2003), உலகமயமாக்கலும் சமூக இயக்கங்களும் : மனித நேய சமுதாயம் அமைய போராட்டங்கள்
“Communal Harmony, Secularism and Nation Building (2005). சனசமூகத்துக்குரிய ஒருமைப்பாடு, மதச் சார்பற்ற தன்மை, மற்றும் நாட்டைக் கட்டிக் காப்பது.
“Communal Harmony, Secularism and Nation Building (2005). சனசமூகத்துக்குரிய ஒருமைப்பாடு, மதச் சார்பற்ற தன்மை, மற்றும் நாட்டைக் கட்டிக் காப்பது.
தேசிய மற்றும் பன்னாட்டு பத்திரிகைகளிலும் ஏறக்குறைய 60 கட்டுரைகள் இவர் வெளியிட்டிருக்கிறார்.
தேசிய மற்றும் பன்னாட்டு பத்திரிகைகளிலும் ஏறக்குறைய 60 கட்டுரைகள் இவர் வெளியிட்டிருக்கிறார்.
மற்ற மத மக்களுடன் உறவு ஏற்படுத்திக்கொள்ள பாப்பரசர் பவுல் VI Roman Curia வில் தனி துறையை 1964ம் ஆண்டு உருவாக்கினார். முதலில் அது கிறிஸ்துவர் அல்லாதவர்களுக்கான செயலகமாக இருந்தது. 1998ல் அதற்கு மதங்களுக்கிடையே நல் உரையாடலுக்கான பாப்பரசரின் ஆலோசனைக் குழு (PCID ) என்று புதுப் பெயர் வைக்கப் பட்டது.
மற்ற மத மக்களுடன் உறவு ஏற்படுத்திக்கொள்ள பாப்பரசர் பவுல் VI Roman Curia வில் தனி துறையை 1964ம் ஆண்டு உருவாக்கினார். முதலில் அது கிறிஸ்துவர் அல்லாதவர்களுக்கான செயலகமாக இருந்தது. 1998ல் அதற்கு மதங்களுக்கிடையே நல் உரையாடலுக்கான பாப்பரசரின் ஆலோசனைக் குழு (PCID ) என்று புதுப் பெயர் வைக்கப் பட்டது.
இரண்டாவது வத்திக்கான் ஆலோசனைக் குழுவின் எழுச்சியாக இருப்பது இந்த PCID - மதங்களுக்கிடையே நல் உரையாடலை வளர்க்க கத்தோலிக்கத் திருச்சபையின் முதன்மையான அலுவலகமாகக் கருதப் படுகிறது.
இரண்டாவது வத்திக்கான் ஆலோசனைக் குழுவின் எழுச்சியாக இருப்பது இந்த PCID - மதங்களுக்கிடையே நல் உரையாடலை வளர்க்க கத்தோலிக்கத் திருச்சபையின் முதன்மையான அலுவலகமாகக் கருதப் படுகிறது.
கத்தோலிக்க மக்களிடையேவும், மற்ற மதத்தைச் சேர்ந்த மக்களுடனும் பரஸ்பர உடன்பாடு, மரியாதை மற்றும் இணைந்து உழைப்பது இவற்றில் முன்னேற்றம் கொண்டு வருவது தான் இந்த இயக்கத்தின் பொறுப்பாக இருக்கும்.
கத்தோலிக்க மக்களிடையேவும், மற்ற மதத்தைச் சேர்ந்த மக்களுடனும் பரஸ்பர உடன்பாடு, மரியாதை மற்றும் இணைந்து உழைப்பது இவற்றில் முன்னேற்றம் கொண்டு வருவது தான் இந்த இயக்கத்தின் பொறுப்பாக இருக்கும்.
மதங்களைப் பற்றிய கல்வியை வளர்க்கவும், உரையாடலுக்காக தேர்ந்தெடுக்கப் பட்ட நபர்களின் உருவாக்கத்தை வளர்க்கவும் இந்த நிறுவனம் உதவுகிறது.
மதங்களைப் பற்றிய கல்வியை வளர்க்கவும், உரையாடலுக்காக தேர்ந்தெடுக்கப் பட்ட நபர்களின் உருவாக்கத்தை வளர்க்கவும் இந்த நிறுவனம் உதவுகிறது.
Matters India
Matters India
Women’s Commission stands with Victims of Sexual Assault
Women’s Commission stands with Victims of Sexual Assault
பாலியல் வன்கொடுமைக்கு பலியான பெண்களுக்குத் துணை நிற்கும் பெண்கள் பணிமுறைக் குழு.
பாலியல் வன்கொடுமைக்கு பலியான பெண்களுக்குத் துணை நிற்கும் பெண்கள் பணிமுறைக் குழு.
ஜெபமாலைத் திருவிழாவான அக்டோபர் 7 ந் தேதி அன்று உயர் மறை மாவட்டத்தின் பெண்கள் பணிமுறைக் குழு ஜெபமும் உபவாசமும் ஏற்பாடு செய்தது.
ஜெபமாலைத் திருவிழாவான அக்டோபர் 7 ந் தேதி அன்று உயர் மறை மாவட்டத்தின் பெண்கள் பணிமுறைக் குழு ஜெபமும் உபவாசமும் ஏற்பாடு செய்தது.
இது எதற்காக?
இது எதற்காக?
பெண்களுக்கு எதிராக சமீப காலங்களில் இந்தியாவில் நடைபெறும் கற்பழிப்புக் குற்றங்களுக்கு நியாயமான நீதி கிடைப்பதற்காக.
பெண்களுக்கு எதிராக சமீப காலங்களில் இந்தியாவில் நடைபெறும் கற்பழிப்புக் குற்றங்களுக்கு நியாயமான நீதி கிடைப்பதற்காக.
மாலை 7.30 மணிக்கு கிட்டத்தட்ட 100 பேர் சேர்ந்து கணினியின் நேரடித் தொடர்பில் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களுக்கும் ஜாதி அரசியலில் வன்முறைக்கு ஆளானவர்களுக்கும் நீதி கிடைப்பதற்காக ஒருமிதமாக தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.
மாலை 7.30 மணிக்கு கிட்டத்தட்ட 100 பேர் சேர்ந்து கணினியின் நேரடித் தொடர்பில் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களுக்கும் ஜாதி அரசியலில் வன்முறைக்கு ஆளானவர்களுக்கும் நீதி கிடைப்பதற்காக ஒருமிதமாக தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியானது ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பு செயலரான சுனிதா மச்சாடோவால் நடத்தப் பட்டது.
இந்த நிகழ்ச்சியானது ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பு செயலரான சுனிதா மச்சாடோவால் நடத்தப் பட்டது.
ஆயர் ஆல்வின் டிசில்வா தனது தொடக்க உரையில் பாப்பரசர் பிரான்சிஸ் எழுதிய Fratelli Tutti என்ற சுற்றறிக்கையைப் பற்றி விளக்கிச் சொன்னார்.
ஆயர் ஆல்வின் டிசில்வா தனது தொடக்க உரையில் பாப்பரசர் பிரான்சிஸ் எழுதிய Fratelli Tutti என்ற சுற்றறிக்கையைப் பற்றி விளக்கிச் சொன்னார்.
ஆண்களுக்கான அதே கௌரவமும் சம உரிமைகளும் உலகமெங்கும் பெண்களுக்கும் கிடைப்பது உலகம் தழுவிய சமூக நிறுவனங்களுக்கு என்னும் எட்டாக் கனியாக உள்ளது. நாம் வார்த்தையால் பேசுவது ஒன்று. ஆனால் நமது முடிவுகள், நிஜங்கள் மற்றொரு கதையை சொல்கின்றன.
ஆண்களுக்கான அதே கௌரவமும் சம உரிமைகளும் உலகமெங்கும் பெண்களுக்கும் கிடைப்பது உலகம் தழுவிய சமூக நிறுவனங்களுக்கு என்னும் எட்டாக் கனியாக உள்ளது. நாம் வார்த்தையால் பேசுவது ஒன்று. ஆனால் நமது முடிவுகள், நிஜங்கள் மற்றொரு கதையை சொல்கின்றன.
பெண்கள் தனிமைப் படுத்தப் படுகிறார்கள். பெண்கள் அவமதிக்கப் படுகிறார்கள். பெண்கள் வன்முறையால் சீரழிக்கப் படுகிறார்கள். ஏனெனில் எப்போதும் அவர்களால் தங்கள் உரிமையை நிலை நாட்டிக் கொள்ள முடிய வில்லை.
பெண்கள் தனிமைப் படுத்தப் படுகிறார்கள். பெண்கள் அவமதிக்கப் படுகிறார்கள். பெண்கள் வன்முறையால் சீரழிக்கப் படுகிறார்கள். ஏனெனில் எப்போதும் அவர்களால் தங்கள் உரிமையை நிலை நாட்டிக் கொள்ள முடிய வில்லை.
பெண்களின் மேல் தொடரப் படும் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருப்பதாக சோபியா கல்லூரி முதல்வர் சகோதரி ஆனந்தா அம்ரித்மஹால் விவரித்தார்.
பெண்களின் மேல் தொடரப் படும் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருப்பதாக சோபியா கல்லூரி முதல்வர் சகோதரி ஆனந்தா அம்ரித்மஹால் விவரித்தார்.
ஒவ்வொரு முறை ஒரு பெண் தாக்கப்படும்போதும், கற்பழிக்கப் படும்போதும், கொலை செய்யப் படும் போதும் ஒரு பெண்ணாக நான் அந்தப் பிரச்னையில் ஈடுபடுத்திக் கொள்கிறேன்.
ஒவ்வொரு முறை ஒரு பெண் தாக்கப்படும்போதும், கற்பழிக்கப் படும்போதும், கொலை செய்யப் படும் போதும் ஒரு பெண்ணாக நான் அந்தப் பிரச்னையில் ஈடுபடுத்திக் கொள்கிறேன்.
கற்பழிப்பு என்பது ஒரு பெண் மீது நடக்கும் இறுதி ஆயுதம் அல்ல, எல்லா பெண்குலத்தின் மீதும் நடக்கும் தாக்குதல். கற்பழிக்கப் பட்ட பெண்ணின் முழு சமூகத்தின் மீதும் நடக்கும் தாக்குதல்.
கற்பழிப்பு என்பது ஒரு பெண் மீது நடக்கும் இறுதி ஆயுதம் அல்ல, எல்லா பெண்குலத்தின் மீதும் நடக்கும் தாக்குதல். கற்பழிக்கப் பட்ட பெண்ணின் முழு சமூகத்தின் மீதும் நடக்கும் தாக்குதல்.
பாதிக்கப் பட்டவரின் தலை விதி என்று இந்த ஆணாதிக்கம் சொல்லும்போது, அது மரணத்தை விட மோசமானது, கண்ணுக்குப் புலப்படாத கற்பழித்தவனின் ஆளுமையை இது வெளிப்படுத்துகிறது.
பாதிக்கப் பட்டவரின் தலை விதி என்று இந்த ஆணாதிக்கம் சொல்லும்போது, அது மரணத்தை விட மோசமானது, கண்ணுக்குப் புலப்படாத கற்பழித்தவனின் ஆளுமையை இது வெளிப்படுத்துகிறது.
பாதிக்கப் பட்டவரின் எதிர்ப்பாற்றல் குன்றிய தன்மையையே காட்டுகிறது. அதை விட மோசமானது அந்த பாதிக்கப் பட்டவரின் மீது போடப் படும் அவமானத்தின் சுமை, மற்றும் இழிவுணர்வு.
பாதிக்கப் பட்டவரின் எதிர்ப்பாற்றல் குன்றிய தன்மையையே காட்டுகிறது. அதை விட மோசமானது அந்த பாதிக்கப் பட்டவரின் மீது போடப் படும் அவமானத்தின் சுமை, மற்றும் இழிவுணர்வு.
பாதித்தவன் அல்ல பாதிக்கப் பட்ட பெண் அவமானப் படுகிறாள். அவளின் குடும்பம், அவளின் சமூகம் வலிமையற்றது, கோழைத் தனமானது என்று அவமானப் படுத்தப் படுகிறது. பெண்ணினத்தின் பெருமையை பாதுகாக்கத் திறமையற்ற குடும்பம் எனப் பேசப் படுகிறது.
பாதித்தவன் அல்ல பாதிக்கப் பட்ட பெண் அவமானப் படுகிறாள். அவளின் குடும்பம், அவளின் சமூகம் வலிமையற்றது, கோழைத் தனமானது என்று அவமானப் படுத்தப் படுகிறது. பெண்ணினத்தின் பெருமையை பாதுகாக்கத் திறமையற்ற குடும்பம் எனப் பேசப் படுகிறது.
ஒரு பெண்ணாக, ஒரு ஆசிரியராக, இந்த மனப்பாங்கை மாற்ற வேண்டிய சவாலை தினமும் நான் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
ஒரு பெண்ணாக, ஒரு ஆசிரியராக, இந்த மனப்பாங்கை மாற்ற வேண்டிய சவாலை தினமும் நான் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
மெர்லின் டி சா பாலினப் பாகுபாட்டு நிகழ்வுகள் அதிகரிப்பதையும், இந்தியாவில் பெண்களின் மீது நடைபெறும் வன்முறைகள் அதிகரிப்பதையும் புள்ளி விவரங்களோடு விவரித்தார். பாலின வன்முறைக் கேடுகளைக் களைய செபமும், விரதமும் செய்வது மிக முக்கியம் என்று அருள் பணி அந்தோணி பெர்னாண்டஸ் அடிகளார் எடுத்துரைத்தார்.
மெர்லின் டி சா பாலினப் பாகுபாட்டு நிகழ்வுகள் அதிகரிப்பதையும், இந்தியாவில் பெண்களின் மீது நடைபெறும் வன்முறைகள் அதிகரிப்பதையும் புள்ளி விவரங்களோடு விவரித்தார். பாலின வன்முறைக் கேடுகளைக் களைய செபமும், விரதமும் செய்வது மிக முக்கியம் என்று அருள் பணி அந்தோணி பெர்னாண்டஸ் அடிகளார் எடுத்துரைத்தார்.
சுனிதா நடத்திய ஜெபமாலையானது அழுத்தமான உணர்வைக் கொண்டு வந்தது. சமூக அநீதியின் மிகப் பெரிய அளவை சிந்தித்துப் பார்த்து, தாழ்மையான உணர்வுடன் செபிக்கும் போது கடவுளை நோக்கி கீழ்கண்ட நோக்கங்களுக்காக விண்ணப்பங்கள் சொல்லப் பட்டன:பெண்களின் மீது நடத்தப்படும் அறிவற்ற கட்டற்றுப் பெருகுகிற பாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காணவும், ஜாதி அரசியலால், வறுமையால், அநீதியான சமூக கலாச்சார வழக்கங்களால் சீரழிக்கப் பட்ட பெண்களின் பாதுகாப்பிற்காகவும் ஆபத்து இல்லாமல் இருப்பதற்காகவும் செபம் செய்யப் பட்டது.
சுனிதா நடத்திய ஜெபமாலையானது அழுத்தமான உணர்வைக் கொண்டு வந்தது. சமூக அநீதியின் மிகப் பெரிய அளவை சிந்தித்துப் பார்த்து, தாழ்மையான உணர்வுடன் செபிக்கும் போது கடவுளை நோக்கி கீழ்கண்ட நோக்கங்களுக்காக விண்ணப்பங்கள் சொல்லப் பட்டன:பெண்களின் மீது நடத்தப்படும் அறிவற்ற கட்டற்றுப் பெருகுகிற பாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காணவும், ஜாதி அரசியலால், வறுமையால், அநீதியான சமூக கலாச்சார வழக்கங்களால் சீரழிக்கப் பட்ட பெண்களின் பாதுகாப்பிற்காகவும் ஆபத்து இல்லாமல் இருப்பதற்காகவும் செபம் செய்யப் பட்டது.
பெண் குழந்தைக்கு எதிரான பாலினப் பாகுபாட்டை முடிக்கவும், கருப்பையில் இருந்து கல்லறை வரைக்கும் பெண்களைப் பாதுகாக்கவும் செய்த விண்ணப்பங்கள் நெஞ்சைத் தொட்டன. முடிவில் செபத்தின் வழியாகவும் விரதத்தின் வழியாகவும் நாங்கள் தீர்வு காணுவோம் என்ற பாடலைப் பாடி கடவுள் எப்போதும் எங்களுடன் இருக்கிறார் என்று சொல்லி, ஒரு நாள் இந்த எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காணுவோம் என்று விளக்கி பிரமாதப் படுத்தி விட்டனர்.
பெண் குழந்தைக்கு எதிரான பாலினப் பாகுபாட்டை முடிக்கவும், கருப்பையில் இருந்து கல்லறை வரைக்கும் பெண்களைப் பாதுகாக்கவும் செய்த விண்ணப்பங்கள் நெஞ்சைத் தொட்டன. முடிவில் செபத்தின் வழியாகவும் விரதத்தின் வழியாகவும் நாங்கள் தீர்வு காணுவோம் என்ற பாடலைப் பாடி கடவுள் எப்போதும் எங்களுடன் இருக்கிறார் என்று சொல்லி, ஒரு நாள் இந்த எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காணுவோம் என்று விளக்கி பிரமாதப் படுத்தி விட்டனர்.
Belinda Dokras, OLPS Chembur
Belinda Dokras, OLPS Chembur
தமிழாக்கம் : திருத் தொண்டர் மு. லாரன்ஸ் சகாயதாஸ்
தமிழாக்கம் : திருத் தொண்டர் மு. லாரன்ஸ் சகாயதாஸ்
Translation into Tamil by Dn. M Lawrence Sahayadass
Translation into Tamil by Dn. M Lawrence Sahayadass